சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் மூலம் இயக்கப்பட்டு வரும் மெட்ரோ ரயில்கள், சென்னைவாசிகள், போக்குவரத்து நெரிசல் இன்றியும், வேகமாக செல்ல வேண்டிய இடத்திற்கு செல்லவும் உதவி வருகிறது. இதில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் பயணித்து பயன் பெற்று வருகின்றனர். சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், மெட்ரோ ரயில்களில் க்யுஆர் குறியீடு பயணச்சீட்டு மற்றும் பயண அட்டைகளைப் பயன்படுத்தி பயணிக்கும் பயணிகளுக்கு 20சதவித கட்டணத் தள்ளுபடி வழங்கி வருகிறது. இந்நிலையில், நடப்பு ஆண்டு ஏப்ரல் மாதத்தில் 66 லட்சத்து 85 ஆயிரத்து 432 பயணிகளும் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளதாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.
நீட் மறுதேர்வு நடத்த உத்தரவிட முடியாது – உச்சநீதிமன்றம் திட்டவட்டம்
நீட் மறுதேர்வு நடத்த முடியாது என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு திட்டவட்டமாக...
Read More