Mnadu News

ஏப். 20-ஆம் தேதி அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்: கட்சி தலைமையகம் அறிவிப்பு.

சென்னை ராயப்பேட்டையிலுள்ள கட்சி தலைமையகத்தில் நடைபெற்ற அதிமுக அவசர செயற்குழுக் கூட்டத்தில், அதிமுகவில் கொள்கை ரீதியான முடிவுகளை மேற்கொள்ள எடப்பாடி பழனிசாமிக்கு முழுஅதிகாரம் வழங்கியது. பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டதற்கும் அதிமுக செயற்குழு ஒப்புதல் அளித்தது.இந்நிலையில், அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் ஏப்ரல் 20ஆம் தேதி நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கான பூத் கமிட்டி அமைப்பது குறித்து விவாதிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Share this post with your friends