உலக நாடுகளை எப்போதுமே பரபரப்பாக வைப்பதில் வட கொரியா கைதேர்ந்த நாடு. வடகொரியா இந்த ஆண்டு பெரிய அளவில் ஏவுகணை சோதனையை தீவிரம் ஆகியுள்ளது. இந்நிலையில், இதுவரை சுமார் 30 இக்கும் மேற்பட்ட ஏவுகணைகளை ஏவி சோதித்துள்ளது.
![](https://mnadu.com/wp-content/uploads/2022/09/North-Korea-missile-16607973493x2-1-1024x683.jpg)
வடகொரியாவின் ஏவுகணை தாக்குதலை சமாளிக்க அமெரிக்கா மற்றும் தென்கொரியாவின் கடற்படைகள் கொரிய எல்லையில் கூட்டுப்போர் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன.
![](https://mnadu.com/wp-content/uploads/2022/09/123882321_31f4aa57-3cc5-4097-b7f8-dfe37a7c105b.jpg)
வடகொரியா இதை எதிர்க்கும் வகையில்
குறுகிய தூரம் செல்லக்கூடிய பாலிஸ்டிக் ஏவுகணையை கடந்த 25 ஆம் தேதி பரிசோதித்தது. இதை தென்கொரிய ராணுவம் உறுதி செய்துள்ளது.
![](https://mnadu.com/wp-content/uploads/2022/09/202201110721486516_North-Korea-fires-suspected-ballistic-missile-second-in-a_SECVPF.jpg)
இந்நிலையில், அமெரிக்காவின் துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் இன்று தென்கொரியாவுக்கு செல்ல இருக்கும் நிலையில் வடகொரியா இந்த ஏவுகணை சோதனையை நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
![](https://mnadu.com/wp-content/uploads/2022/09/599644.jpg)