Mnadu News

ஐபிஎல் டிக்கெட் விற்பனை முறைகேடு: சென்னை நகர சிவில் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல்.

வழக்குரைஞரான அசோக் சக்கரவர்த்தி சென்னை நகர சிவில் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். அவர் தாக்கல் செய்துள்ள மனுவில்,. “சென்னை எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடப்பு ஐபிஎல் சீசனுக்கான டிக்கெட் விற்பனையில் முறைகேடு நடந்துள்ளது,அதே நேரம், கள்ளச் சந்தையில் டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. அதே வேளையில், சந்தேகத்திற்கிடம் அளிக்கும் வகையிலான ஆன்லைன் டிக்கெட் விற்பனை நடந்துள்ளது எனவே போட்டியை நடத்திய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் மற்றும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த மனுவின் மீதான விசாரணை விரைவில் நடை பெறும் என்று எதிhபர்ககப்படுகிறது.

Share this post with your friends