Mnadu News

ஐஸ்வர்யா ராய் மகள் தொடர்ந்த வழக்கு:10 யூடியூப் சேனல்களை முடக்க உயர்நீதிமன்றம் தீர்ப்பு.

பிரபல பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராயின் 12 வயதான மகள் ஆராத்யா பச்சனுக்கு உடல்நிலை சரியில்லை என்றும் அவர் அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டுள்ளார் என்றும் தவறான தகவலைப் சமீபத்தில் சில யூடியூப் சேனல்கள் பரப்பினர். இதனைக் கண்ட ஆராத்யா தன்னைப் பற்றிய தவறான கருத்துக்களைப் பகிர்ந்த யூடியூப் சேனல்களை முடக்க வேண்டும் என டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.அந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. விசாரணை முடிவில் ஆராத்யா பற்றி உண்மைக்கு புறம்பான தகவல்களை வெளியிட்ட 10க்கும் மேற்பட்ட யூடியூப் சேனல்களை முடக்க டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Share this post with your friends