Mnadu News

ஒரே நாளில் வெளியாகும் இரண்டு மாபெரும் படங்கள்!

பொன்னியின் செல்வன் பாகம் ஒன்று கடந்த மாத இறுதியில் வெளியாகி 500 கோடி வசூலை நெருங்கி இன்னும் திரை அரங்குகளில் வெற்றிகரமாக ஓடி கொண்டிருக்கிறது. இதன் இரண்டாம் பாகம் அடுத்த வருட ஏப்ரல் மாதத்தில் வெளியாகும் என தகவல்கள் பரவி வருகின்றது.

அதே போல நெல்சன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பை பிப்ரவரி மாதம் முடித்து டிரெய்லர், பாடல்களை படக்குழு வெளியிட திட்டம் போட்டுள்ளனர்.

இந்த நிலையில் ஒரு புதிய தகவல் வெளியாகி உள்ளது. அது பொன்னியின் செல்வன் பாகம் இரண்டு மற்றும் ஜெயிலர் ஆகிய இரண்டு படங்களும் ஒரே நாளில் வெளியாக உள்ளது என்ற தகவல் தான் அது.

Share this post with your friends