Mnadu News

ஒரே பாலினம் திருமணம் வழக்கு: தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்.

ஒரே பாலினத்தைச் சேர்ந்த ஜோடிகள், தங்களின் திருமணத்துக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் அளிக்க வேண்டும் என, உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளன. இந்த திருமணங்களுக்கு சட்ட அங்கீகாரம் அளிக்க மத்திய அரசு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. என்றாலும், இது குறித்து ஆய்வு செய்ய ஒரு குழு அமைக்க, அரசு தரப்பில் விருப்பம் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில். இந்த வழக்குகள் ஐந்து நீதிபதிகள் அடங்கிய உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.அப்போது, இந்த வழக்கின் அனைத்து தரப்பு வாதம் மற்றும் விசாரணை முடிவடைந்ததாக கூறி, தேதி குறிப்பிடப்படாமல் தீர்ப்பை உச்சநீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

Share this post with your friends