Mnadu News

ஓட்டல் அதிபர் மனைவியிடம் மர்ம நபர்கள் கைவரிசை..!

புதுவை வெங்கட்டா நகரில் நடந்து சென்ற ஓட்டல் அதிபர் மனைவியிடம் மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் நகையை பறித்து சென்றனர்.

புதுவை காமராஜர் நகர் சன்னதி தெருவை சேர்ந்தவர் டெல்லி குமார். இவர் 45 அடி ரோட்டில் ஓட்டல் நடத்தி வருகிறார். இவரது மனைவி அம்பிகா ஓட்டலை மேற்பார்வையிட்டு விட்டு வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது வெங்கட்டாநகர் திருவேங்கடம் வீதியில் சென்ற போது ஒரே மோட்டார் சைக்கிளில் ஹெல்மட் அணிந்தும், முக கவசம் அணிந்தும் வந்த 2 மர்ம நபர்கள் திடீரென அம்பிகா கழுத்தில் அணிந்திருந்த தங்க செயினை பறித்தனர்.

அப்போது சுதாரித்துக்கொண்ட அம்பிகா செயினை கையால் இறுக்கமாக பிடித்துக்கொண்டார். இதுகுறித்து டெல்லி குமார் பெரியகடை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வு செய்து செயினை பறித்து சென்ற மர்ம நபர்களை பிடிக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

Share this post with your friends