Mnadu News

ஓட்டு கேட்டு ஊருக்குள் யாரும் வரக்கூடாது பேனர் வைத்து அதிரடி கட்டளை போட்ட ஊர் பொதுமக்கள்.!

‘வாக்கு கேட்டு வராதீர்கள்’ சேலம் மாவட்டம் மேச்சேரியில் ஓட்டு கேட்டு யாரும் வேட்பாளர்கள் ஊருக்குள் வரக்கூடாது என்று பேனர் வைக்கப்பட்டுள்ளது. சேலம் மாவட்டம் அரங்கனுர் ஊராட்சியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன இங்கு சாலை, குடிநீர், மருத்துவமனை, கல்வி போக்குவரத்துக்கு என எந்த வசதியும் செய்யாமல் அலட்சியம் காட்டும் அரசுக்கு எச்சரிக்கை பேனர் வைக்கப்பட்டுள்ளன.

இந்த தகவலை அறிந்து வந்த வட்டார வளர்ச்சி அலுவலர் ‘செல்வம்’ மக்களிடம் பேச்சுவாரத்தை நடத்தி குறைகளை சரி செய்து தருவதாக உறுதியளித்தார்.

Share this post with your friends