வாடகை ஆட்டோ சேவைகளை நிறுத்துமாறு ஓலா, உபெர் போன்ற கைப்பேசி செயலி வழி வாகன சேவை நிறுவனங்களுக்கு கர்நாடக போக்குவரத்துத் துறை உத்தரவிட்டுள்ளது. கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக பொதுமக்கள் புகார் அளித்ததையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதோடு, கர்நாடக அரசின் உத்தரவை மீறி இயக்கப்பட்ட அந்நிறுவனங்களின் ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்நிலையில் போக்குவரத்துத் துறையின் இந்த உத்தரவுக்கு எதிராக ஓலா, உபெர் நிறுவனங்கள் அம்மாநில உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தன. இவ்வழக்கை விசாரித்த கர்நாடக உயர்நீதிமன்றம், ஓலா, உபெர் நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி முடிவெடுக்கும் வரை அந்த நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கூடாது என உத்தரவிட்டது. இதன் மூலமாக ஓலா, உபெர் நிறுவனங்கள் ஆட்டோ சேவைகளை தொடர அனுமதி அளித்துள்ளது.அதோடு, கட்டணம் குறித்து கர்நாடக அரசு முடிவெடுக்கும் வரை, அரசு நிர்ணயித்த தொகையைவிட 10 சதவீதம் கூடுதலாக கட்டணம் நிர்ணயித்து கொள்ளலாம் என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது.
நீட் மறுதேர்வு நடத்த உத்தரவிட முடியாது – உச்சநீதிமன்றம் திட்டவட்டம்
நீட் மறுதேர்வு நடத்த முடியாது என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு திட்டவட்டமாக...
Read More