Mnadu News

கடனில் மூழ்கிய கௌதம் மேனன்… ரீலீஸ் ஆகுமா என்னை நோக்கி பாயும் தோட்டா

தமிழ் திரையுலகில் பல வெற்றி படங்களை கொடுத்து வெற்றி இயக்குனராக வளம் வருகிறார் இயக்குனர் கௌதம் மேனன். தமிழில் பல முன்னனி பிரபலங்கள் இவர் இயக்கத்தில் நடிக்கவும் ஆசைபடுகின்றனர். வித்தியாசத்தையும் பிரம்மாண்டத்தையும் சுவாரசியமாக கொடுக்கும் திறன் உள்ளவர் இயக்குனர் கௌதம் மேனன். சமீபத்தில்’ அச்சம் என்பது மடமையடா’ இவர் இயக்கத்தில் வெளிவந்து வெற்றி கரமாக ஓடியது. இப்படத்தில் நடித்த சிம்புவுக்கும் இந்த படம் ஒரு திருப்புமுனையாக அமைத்துள்ளது. இந்நிலையில் தற்போது கௌதம் மேனன் தயாரிப்பாளராகவும் மாறியுள்ளார்.

 

இவரது தயாரிப்பில் இவரே இயக்கி தற்போது தனுஷை வைத்து ‘என்னை நோக்கி பாயும் தோட்டாவும்’, சியான் விக்ரமின்  ‘துருவ நட்சரமும்’ எடுத்து வருகிறார். இந்த இரண்டு படத்தையும் தயாரிக்க கிட்டத்தட்ட 150 கோடிக்கு மேல் கடன் வாங்கிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் பெரும் கடனாளியாக மாறியுள்ளதாகவும் தனுஷுக்கு மட்டும் 1 கோடிக்கும் மேல் சம்பளம் பாக்கி வைத்திருக்கிறாராம் நம்ப வெற்றி இயக்குனர் கௌதம்மேனன். இதனால் இந்த இரண்டு படங்களும் திரைக்கு வருமா என்பதே சந்தேகமாக இருக்கிறது .

Share this post with your friends