Mnadu News

கடற்கரையில் ஒதுங்கிய மீன்கள் கூட்டம்; அள்ளிச்சென்ற பொதுமக்கள்;

அரப்பிகடலில் ஏற்படும் காலநிலை மாற்றத்தால் அவ்வப்போது சிறு சிறு மீன்கள் குவியல் குவியலாக கரை ஒதுங்குவது வழக்கம். இந்நிலையில் கேரளா மாநிலம் கோழிக்கோடு அருகே வடகரை கடற்கரை பகுதிகளான குழியாடி, புரவாங்கரை போன்ற பகுதிகளில் திடீரென குவியல் குவியலாக சாளை மீன்கள் கரை ஒதுங்கியது .

இதனை பார்த்த பொதுமக்கள் மீன்களை அள்ளி சென்றனர். அதிகளவில் மீன்கள் கரை ஒதுங்கியதால் நாட்டுப்படகு மீனவர்களும் கடலுக்குள் செல்லாமல் கரைக்கு வந்த மீன்களை மகிழ்ச்சியுடன் வலை போட்டு பிடித்து சென்றனர்.

Share this post with your friends