Mnadu News

கட்டடம் இடிந்து விழுந்து விபத்து: 5 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு.

சென்னை பிராட்வே அரண்மனைக்காரன் தெருவில் உள்ள பழமையான நான்கு மாடி கட்டிடம் இன்று இடிந்து விழுந்தது. இந்த கட்டிட விபத்து குறித்து தகவலறிந்த போலீசார், தீயணைப்பு, தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் விரைந்து சென்று மீட்புப்பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில், கவனகுறைவாக செயல்படுதல், பொதுமக்களுக்கு ஆபத்தை ஏற்படுத்துதல் உள்ளிட்ட 5 பிரிவுகளில் கீழ் கட்டட உரிமையாளர் பரத் மீது வழக்குப்பதிந்து எஸ்பிளனேடு காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Share this post with your friends