Mnadu News

கட்டாயப்படுத்தி மவுனமாக்கும் கலாச்சாரம் ஜனநாயகத்தை அழித்துவிடும்: கார்கே ஆவேசம்.

அம்பேத்கரின் பிறந்த நாளை முன்னிட்டு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வெளியிட்டுள்ள செய்தியில், எதிர்க்கட்சிகள், குடிமைச்சமூகம், சமூக செயல்பாட்டாளர்கள், அரசு சாரா நிறுவனங்கள், நீதித்துறை, ஊடகங்கள் போன்றவைகளை கட்டயமாக மவுனத்திற்கு உள்ளாக்கும் கலாச்சாரமும், மக்களை தேச விரோதிகள் என முத்திரை குத்தும் போக்கும் நாட்டின் ஜனநாயகம் மற்றும் அரசியலமைப்பை அழித்துவிடும். இந்திய அரசியல் சூழலில் தனி நபர் துதிபாடுவது எத்தகைய தீமையை ஏற்படுத்தும் என்பது குறித்து அம்பேத்கர் முன்பே எச்சரிக்கை செய்துள்ளார் என்று குறிப்பிட்டுள்ளார்.

Share this post with your friends