Mnadu News

கனடாவை தாக்க காத்திருக்கும் ‘பியோனா’ புயல்!

‘பியோனா’ புயல் தாக்க உள்ளதாக வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கனடாவின் கிழக்கு பகுதிகளை ‘பியோனா’ புயல் தாக்க உள்ளதாக வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கனடாவின் கிழக்கு பகுதிகளை ‘பியோனா’ என்கிற சக்தி வாய்ந்த புயல் தாக்க இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. பியோனா புயல் அட்லாண்டிக் கடலில் உள்ள தீவான பெர்முடாவை பலத்த மழை மற்றும் காற்றுடன் நேற்று தாக்கியது. அங்கு மணிக்கு 103 மைல்கள் (166 கிமீ) வேகத்தில் காற்று வீசியது என்று பெர்முடா வானிலை சேவை மையம் தெரிவித்துள்ளது.

இதை தொடர்ந்து பியோனா புயல் தற்போது கிழக்கு கனடாவை நோக்கி வடக்கு நோக்கி செல்கிறது. கனடா வரலாற்றில் மிகவும் கடுமையான புயல்களில் ஒன்றாக இருக்கும் என்று கணிக்கப்பட்டு உள்ளது. பியோனா புயல் மணிக்கு 35 மீட்டர் (56 கிலோ மீட்டர்) வேகத்தில் வடக்கு நோக்கி நகர்கிறது என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. கனடாவின் கேப் பிரெட்டன் தீவை புயல் கடுமையாக தாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக 8 அங்குலம் (20 செமீ) வரை மழை பெய்யும். அதே சமயம் சூறாவளி காற்று கட்டிடங்களை சேதப்படுத்தும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

Share this post with your friends

விரைவில் செல்வா இயக்கத்தில் உருவாகும் மல்டி ஸ்டார் படம்! யார் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா?

இயக்குனரும், நடிகருமான செல்வராகவன் இயக்கத்தில் அறிமுகமானவர் பன்முகத் திறமைசாலி நடிகர் தனுஷ். துள்ளுவதோ...

Read More