Mnadu News

கனமழையால் பெரியார் நீர்வீழ்ச்சியில் கடும் வெள்ளப்பெருக்கு.

கள்ளக்குறிச்சியில் உள்ள கல்வராயன்மலை மற்றும் கச்சிராயபாளையம் பகுதியில் கன மழை பெய்துள்ளது. இதனால் கல்வராயன்மலை பகுதியில் உள்ள ஆறுகளில் நீர் வரத்து அதிகரித்துள்ளது. இதன் காரணமாக பெரியார் நீர் வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அதோடு, கவியம், மேகம், சிறுகளூர், எட்டியாறு போன்ற நீர் வீழ்ச்சிகளிலும் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.

Share this post with your friends