Mnadu News

கருத்து வேறுபாட்டால் மகனை இழந்த தம்பதியினர்..!

புதுச்சேரி அரியாங்குப்பம், ஆர்.கே நகர் தபால்காரர் வீதியை சேர்ந்தவர் சரவணன்(41). கொத்தனார் வேலை செய்கிறார். இவரது மகன் சிவகுரு (14) மனவெளியில் உள்ள தந்தை பெரியார் அரசு பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார். தாய் கவிதா-தந்தை சரவணன் ஆகிய இருவருக்கும் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த சில நாட்களாக பிரந்து தனித்தனியே வசித்து வருகின்றனர்.

இந்த நிலையில் சிவகுரு காலைமுதல் மாலை வரை தாயுடன் இருந்துவிட்டு இரவு தூங்குவதற்கு மட்டும் தந்தை சரவணனுடன் இருப்பது வழக்கம், எனவே இவர் நேற்று சக நண்பர்களோடு ஆற்று பகுதியில் மூவரும் குளித்துள்ளனர். அப்போது சிவகுரு மட்டும் ஆற்றில் அடித்து சென்றுள்ளார்.

இந்த சம்பவத்தை வீட்டில் சொன்னால் திட்டுவார்களே என்ற பயத்தில் யாரும் சொல்லவில்லை. மேலும் இரவு நேரமாகியும் மகன் வீட்டிற்கு வரவில்லையே என்று எண்ணிய சரவணன் பல்வேறு இடங்களில் தேடியும் விசாரித்தும் பார்த்துள்ளார். அப்போது இன்று காலை மூவரும் ஒன்றாகத்தான் இருந்தார்கள் என்ற தகவலையடுத்து உடன் சென்ற சிறுவர்களிடம் விசாரித்ததில் உண்மை தெரிந்தது.

அதனையடுத்து தந்தை சரவணன் அரியாங்குப்பம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் உதவி ஆய்வாளர் முருகாநந்தம், ஏஎஸ்ஐ அன்பரசன் மற்றும் தீயணைப்பு துறையினர் படகு மூலம் தீவிரமாக தேடுதல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். எட்டாம் வகுப்பு மாணவன் ஆற்றில் அடித்து செல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெறும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.✒️

Share this post with your friends