Mnadu News

கர்நாடகத்தில் அதிமுக தனித்துப் போட்டி:எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு.

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் வருகின்ற மே 10-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், பாஜக கூட்டணியில் அதிமுக போட்டியிடுவது குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது. அதேபோல், ஓபிஎஸ் தரப்பினரும் கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பாவை சந்தித்து போட்டியிடுவது குறித்து ஆலோசனை நடத்தினர்.இந்நிலையில், புலிகேசி நகர் தனித் தொகுதியில் பாஜக வேட்பாளராக முரளி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதிமுக சார்பில் அன்பரசன் போட்டியிடவுள்ளதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

Share this post with your friends