Mnadu News

கர்நாடகாவில் ஊழலை தடுக்க பிரதமர் என்ன நடவடிக்கை எடுத்தார்?: ராகுல் காந்தி கேள்வி.

கர்நாடகாவில் தீர்த்தஹள்ளியில் நடைபெற்ற பொது கூட்டத்தில் பேசியுள்ள காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி,பாஜகவின் அரசு ஜனநாயகத்தை அழித்து 3 ஆண்டுகளுக்கு முன்பு எங்கள் ஆட்சியை களவாடியது. இந்த அரசின் ஊழல் பற்றி பிரதமர் மோடி பேசாதது ஏன்?.அதே நேரம், கர்நாடகாவில் ஊழலை தடுக்க என்ன நடவடிக்கை எடுத்துள்ளார் என்பதை அவர் தெரிவிக்க வேண்டும்.அதோடு, காங்கிரஸ் தன்னை 91 முறை தாக்கி பேசியதாக பிரதமர் மோடி கூறினாரே தவிர, கர்நாடகா பற்றி அவர் எதுவும் பேசவில்லை. இப்போதாவது,கர்நாடத்திற்கு பாஜக அரசு என்ன செய்யப்போகிறது என்பதை பிரதமர் சொல்ல வேண்டும் என்று கூறியுள்ளார்.

Share this post with your friends