கர்நாடகத்தில் உள்ள ஆளுநர் மாளிகையில் வெடிகுண்டு மிரட்டல் இருப்பதாக வந்த தொலைபேசி அழைப்பையடுத்து அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கர்நாடக ஆளுநர் மாளிகைக்கு நேற்றிரவு 11.30 மணியளவில் காவல்துறையினர் கட்டுப்பாட்டு அறைக்கு தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்ட நபர் மிரட்டல் விடுத்ததாக புகார் எழுந்துள்ளது.
உடனடியாக ஆளுநர் மாளிகையில் வெகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய்கள் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது.
சோதனையில் அபாயம் விளைவிக்கும் விதமாக எந்த விதமான பொருளும் கைப்பற்றப்படவில்லை. இதையடுத்து தொலைபேசியில் மிரட்டல் விடுத்த நபரை கண்டுபிடிக்கும் முயற்சியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.