Mnadu News

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல்: மே 1-ஆம் தேதி பிரச்சாரத்தை தொடங்குகிறார் பிரதமர் மோடி.

கர்நாடக சட்டப்பேரவைக்கு வருகிற மே மாதம் 10-ஆம்; தேதி தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 13-ஆம்; தொடங்கி முடிந்தது.இந்த நிலையில் கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி பிரதமர் மோடி வருகிற மே 1-ஆம் தேதி முதல் தனது பிரசாரத்தை தொடங்குவார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. 10 நாட்கள் இங்கு பிரசாரம் செய்யும் அவர், சுமார் 30 பிரசார கூட்டங்களில் கலந்து கொண்டு வாக்கு சேகரிப்பார் என்று கூறப்படுகிறது. அவரது பிரசார பயண திட்டம் வகுக்கப்பட்டு வருகிறது.ஒரு நாளைக்கு குறைந்தது 3 பிரசார கூட்டங்களில் பங்கேற்க அவர் திட்டமிட்டுள்ளார்.

Share this post with your friends