கடல் மாசுப்படுவதை தடுக்க கல்லூரி மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
![](https://mnadu.com/wp-content/uploads/2022/09/image-93-1024x524.png)
ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் இறுதி வாரம் “உலக கடல் நாள்” உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. அதனைத்தொடர்ந்து காஞ்சிபுரம் மாவட்டம் மாங்காட்டில் செயல்படும் ‘இண்டஸ் சீபரெர்ஸ் அகாடமி’ என்னும் தனியார் கப்பல்துறை தொழில்நுட்ப கல்லூரியில் பசுமை உலக கடல் தினம் கொண்டாடப்பட்டது. அப்போது கடல் வளம் மற்றும் கடல் மாசுப்படாமல் காப்பது குறித்து கப்பல் துறை சார்பாக பயிற்சி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.