Mnadu News

கல்வி நிறுவனங்களில் உயிரிழப்பு: உத்தரவு மாற்றியமைப்பு.

கல்வி நிறுவனங்களில் நிகழும் இயற்கைக்கு மாறான உயிரிழப்புகளை சிபிசிஐடி விசாரிக்கவும், கல்வித்துறை விசாரணைக்கு பின்னரே கைது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், இது போன்ற வழக்குகளை விசாரிப்பதால், சிபிசிஐடி காவல் துறையினரின் பணி பாதிக்கப்படுவதால், உத்தரவை மாற்றியமைக்கக் கோரி காவல் துறை தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதை ஏற்று கொண்ட உயர் நீதிமன்ற நீதிபதி சதிஷ் குமார் , கல்வி நிலையங்களில் நிகழும் உயிரிழப்புகள்; குறித்து இனி,சம்பந்தப்பட்ட காவல் துறையினரே விசாரிக்கலாம் என்று உத்தரவை மாற்றியமைத்தார்.

Share this post with your friends