குஜராத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், கள்ளநோட்டுகள் புழக்கம் அதிகரித்துள்ளது. இந்நிலையில், ஆம்புலன் ஒன்றில் பல கோடி மதிப்புள்ள கள்ளநோட்டுகள் கொண்டு செல்லப்படுவதாக கடந்த மாதம் 29 ஆம் தேதி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்திய போலீசார், அகமதாபாத்-மும்பை சாலையில் வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது திக்ரி கல்வி அறக்கட்டளையின் ஆம்புலன்ஸை இடைமறித்து சோதனையிட்டனர்.
அதில் ஆம்புலன்சில் 6 பெட்டிகளில் இருந்த 25 கோடியே 8 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கள்ளநோட்டுகளை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 6 பேரை கைது செய்துள்ளதாக தெரிவித்தனர்.
இந்நிலையில், ஐந்து நாட்களுக்கு முன்பு சூரத்தில் ஆம்புலன்சில் இருந்து கைப்பற்றப்பட்ட 6 பெட்டிகளில் வைக்கப்பட்டிருந்த கள்ளநோட்டுகளின் மதிப்பு .316 கோடியே 98 லட்சம் ரூபாய் அளவிற்கு உள்ளதாக போலீசார் தெரிவித்து உள்ளனர்.