கர்நாடகா மாநிலம் பாகல்கோட்டில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசியுள்ள அமித்ஷா, கர்நாடகாவின் எதிர்காலத்தை பிரதமர் நரேந்திர மோடியின் கைகளில் ஒப்படைக்கும் தேர்தல் இது.அதோடு, கர்நாடகாவை வளர்ந்த மாநிலமாக மாற்றுவதுடன், அரசியல் ஸ்திரத்தன்மையையும் கொண்டு வருவதற்கு மக்கள் அனைவரும் பாஜ.க,வுக்கு ஓட்டளியுங்கள்.ஒரு வேளை,,கர்நாடகாவில் காங்கிரஸ், ஆட்சிக்கு வந்தால், குடும்ப அரசியல் எப்போதும் உச்சத்தில் இருக்கும்.அதன் காரணமாக மாநிலத்தில் உள்ள பகுதியில் அனைத்தும் கலவரங்களால் பாதிக்கப்படும். அதேபோல் ஊழல் எப்போதும் உச்சத்தில் இருக்கும்.தற்சமயம், பாஜ.க, வின் இரட்டை எஞ்சின் அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது.எப்போதும், மதத்தின் அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்கக்கூடாது என்பதை நாங்கள் நம்புகிறோம் என்று பேசியுள்ளார்.
நீட் மறுதேர்வு நடத்த உத்தரவிட முடியாது – உச்சநீதிமன்றம் திட்டவட்டம்
நீட் மறுதேர்வு நடத்த முடியாது என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு திட்டவட்டமாக...
Read More