Mnadu News

‘இந்தியா’ கூட்டணி பொதுக்கூட்டத்தில் பங்கேற்க மும்பை சென்றடைந்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

மும்பை சிவாஜிபார்க் மைதானத்தில் ராகுல்காந்தியின் யாத்திரை நிறைவு விழா பொதுக்கூட்டம் மாலை 5 மணி அளவில் நடைபெற உள்ளது. இதில் ‘இந்தியா’ கூட்டணி கட்சி தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள்.


குறிப்பாக தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், ராஷ்டிரீய ஜனதாதளம் தலைவர் தேஜஸ்வி யாதவ், தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பரூக் அப்துல்லா, ஜார்கண்ட் முதல்-அமைச்சர் சம்பாய் சோரன் உள்பட பலர் பங்கேற்கிறார்கள்.

மேலும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, உத்தவ் பாலாசாகேப் தாக்கரே சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, தேசியவாத காங்கிரஸ்-சரத்சந்திரபவார் கட்சி தலைவர் சரத்பவார் உள்ளிட்டோர் கலந்து கொள்கிறார்கள்.

இந்த கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை விமான நிலையத்தில் இருந்து விமானம் மூலம் மும்பை சென்றடைந்தார். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனும் இந்த கூட்டத்தில் கலந்துகொள்ள உள்ளது குறிப்பிடத்தக்கது.

Share this post with your friends