Mnadu News

காஞ்சிபுரத்தில் அதிமுகவின் 51-வது ஆண்டு துவக்க விழா கொண்டாட்டம்

அனைத்திந்திய அண்ணா திமுக கட்சியை பாரதரத்னா முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர் தொடங்கி இன்றோடு 50 ஆண்டு நிறைவடைந்த நிலையில், கட்சியின் 51 வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு காஞ்சிபுரம் மாவட்ட அதிமுக ஓபிஎஸ் அணி சார்பில் மாவட்ட செயலாளர் முத்தியால்பேட்டை ஆர்.வி. ரஞ்சித் குமார் ஏற்பாட்டின் பேரில் கட்சியின் 50வது ஆண்டு நிறைவு விழாவும் 51 வது ஆண்டு துவக்க விழாவும் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.

அதனைத்தொடர்ந்து அதிமுகவின் கட்சி கொடி ஏற்றப்பட்டு எம்ஜிஆர்,ஜெயலலிதா, திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் ஐம்பது கிலோ கேக் வெட்டப்பட்டு பொது மக்களுக்கும், அதிமுக தொண்டர்களுக்கும் வழங்கப்பட்டது.

Share this post with your friends