சென்னை மாநகராட்சி மான்றக் கூட்டம் மேயர் பிரியா தலைமையில் ரிப்பன் மாளிகையில்நடைபெற்றது. இதில் 36 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இவற்றில் முக்கியமாக, சென்னை மாநிலக் கல்லூரி வளாகத்தில் முன்னாள் இந்திய பிரதமர் வி.பி.சிங் சிலை, பேராசிரியர் அன்பழகன் வளாகத்தில் அவரது சிலை நிறுவ தடையின்மைச் சான்று வழங்கபட்டதற்கு அனுமதி. சென்னை மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் 53 இடங்களில் செயல்பட்ட அம்மா குடிநீர் நிலையங்களை மெட்ரோ வாட்டர் நிர்வாகத்திடம் அளிக்க அனுமதி.சென்னை பிராட்வேயில் உள்ள பேருந்து நிலையத்தை வணிக வளாகத்துடன் கூடிய போக்குவரத்து முனையமாக மாற்றும் திட்டத்தை 300 கோடி ரூபாய் செலவில் செயல்படுத்துவது தொடர்பாக அரசிடம் அனுமதி பெற ஒப்புதல் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
நீட் மறுதேர்வு நடத்த உத்தரவிட முடியாது – உச்சநீதிமன்றம் திட்டவட்டம்
நீட் மறுதேர்வு நடத்த முடியாது என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு திட்டவட்டமாக...
Read More