Mnadu News

குற்றாலம் அருவிகளில் குளிக்க அனுமதி.

மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்த தொடர் மழை காரணமாகவும், குற்றாலம் பகுதியில் பெய்த கனமழையின் காரணமாக, அருவிகளில் நேற்று பிற்பகல் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது. இன்று அதிகாலையில் பேரருவியில் தண்ணீர் வரத்து குறைந்ததைத் தொடர்ந்து குற்றாலத்தின் அனைத்து அருவிகளிலும் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டது.,இதையடுத்து சுற்றுலாப் பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.

Share this post with your friends