கன்னியாகுமரி மாவட்டம் மெதுகும்மல் பகுதியை சேர்ந்த சுனில் என்பவரின் 11 வயதான மகன் தனியார் பள்ளியில் 6 ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த சிறுவன் இந்த சிறுவனிடம் ஆசிட் கலந்த குளிர்பானத்தை வழங்கியுள்ளார்.
![](https://mnadu.com/wp-content/uploads/2022/10/7-2.jpg)
அதனை குடித்த சிறுவன் காய்ச்சல் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிறுவனை மருத்துவர்கள் பரிசோதனை செய்த போது சிறுவன் அருந்திய குளிர்பானத்தில் ஆசிட் கலந்து கொடுக்கப்பட்டுள்ளதும் இதனால் இரண்டு சிறுநீரகங்களும் செயல் இழந்து இருந்ததும் தெரியவந்தது. இதனையடுத்து சிறுவனின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.