Mnadu News

கென்யாவில் வறட்சி: ஊருக்குள் புகுந்த 11 சிங்கங்களை சுட்டு கொன்ற மக்கள்.

ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான கென்யாவில் கிளிமஞ்சாரோ என்ற மலை பிரசித்தி பெற்றது. இதன் அருகே கஜியாடு கவுன்டி பகுதிக்கு உட்பட்ட அம்போசெலி உயிர்சூழல் பகுதி அமைந்து உள்ளது. இது யுனெஸ்கோ அமைப்பால் பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு உள்ளது.இந்த சூழலில், 40 ஆண்டுகளில் இல்லாத வகையில் வறட்சியின் பிடியில் சிக்கி கென்யா தவித்து வருகிறது. இதனால், விலங்குகள் இடையே இயற்கையான முறையில் வேட்டையாடுவதில் சிரமம் காணப்படுகிறது. மறுபுறம் பல விலங்குகளை பறிகொடுத்த கால்நடை உரிமையாளர்களும், அதிக எச்சரிக்கையுடன் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் மனித, சிங்க மோதல் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில், வனத் துறையின் செய்தி தொடர்பாளர் அளித்துள்ள பேட்டியில்,இந்த வார தொடக்கத்தில் ஆப்பிரிக்காவின் மிக வயது முதிர்ந்த அதாவது 19 வயதான சிங்கங்களில் ஒன்றான லூன்கிட்டோ பாதுகாக்கப்பட்ட பகுதியை விட்டு வெளியே வந்து உள்ளது. அதிக பசியாக இருந்த அந்த சிங்கம், கால்நடை பகுதிகளுக்குள் புகுந்து உள்ளது. இதனை கவனித்த உரிமையாளர் அதனை சுட்டு கொன்றுள்ளார.இதே போல் இப்பகுதியில் 11 சிங்கங்கள் கொல்லப்பட்டு உள்ளன என்று தெரிவித்துள்ளார்.

Share this post with your friends