Mnadu News

கேஜரிவால் உரிய நேரத்தில் பதிலளிப்பார்: பீகார் முதல் அமைச்சர் நிதிஷ் குமார் கருத்து.

பீகார் தலைநகர் பாட்னாவில் செய்தியாளர்களிடம் பேசியுள்ள பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார், ரவிந்த் கேஜரிவாலுக்கு எதிராக என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பது மக்களுக்குத் தெரியும். அவர் சிறந்த மனிதர். டெல்லியில் பல முன்னேற்றங்களுக்கான வேலையை அவர் செய்துள்ளார். அவருக்கு எதிரான அனைத்து நடவடிக்கைகளுக்கும், கேள்விகளுக்கும் அவர் உரிய நேரத்தில் பதில் அளிப்பார். இதுபோன்ற காரணங்களுக்காகவே நாங்கள் நாட்டிலுள்ள பல கட்சிகளை மத்தியில் ஆளும் பாஜகவுக்கு எதிராக ஒருங்கிணைத்து வருகிறோம். நாங்கள் ஒன்றாக ஒற்றுமையாக இணைந்து செயல்படுவோம் என்று கூறியுள்ளார்.

Share this post with your friends