Mnadu News

கேரளத்துக்கு இரு நாள் பயணமாக ஏப். 24-இல் பிரதமர் மோடி வருகை.

பிரதமர் நரேந்திர மோடி கேரளத்துக்கு 2 நாள் பயணமாக ஏப். 24-இல் வருகை தரவிருக்கிறார். அந்த மாநிலத்தின் முதல் வந்தே பாரத் ரயில் சேவையை ஏப். 25-இல் அவர் தொடங்கிவைக்கவுள்ளார். பிரதமரின் வருகையையொட்டி, அவருக்கு பிரம்மாண்ட வரவேற்பு அளிப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு வருவதாக, மாநில பாஜக பிரிவு தெரிவித்துள்ளது. பிரதமர் மோடியின் வருகை, அந்த மாநிலத்தில் பாஜகவின் தேர்தல் பிரசாரத்துக்கு மேலும் உத்வேகமளிக்கும் என்று கட்சியினர் நம்புகின்றனர்.

Share this post with your friends