Mnadu News

கேரள குண்டு வெடிப்பு சம்பவம்; உயிரிழப்பு 8 ஆக உயர்வு

கேரள மாநிலம் களமச்சேரியில் கடந்த அக்டோபர் மாதம் 29-ந்தேதி கிறிஸ்தவ சபை நடத்திய பிரார்த்தனை கூட்டத்தில் நடைபெற்ற  குண்டு வெடிப்பு சம்பவம் அதிர்வலையை ஏற்படுத்தியது.  இதில் சம்பவ இடத்திலேயே 3 பெண்கள் உயிரிழந்தனர். 50-க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர். இது தொடர்பாக கொச்சியை சேர்ந்த டொமினிக் மார்ட்டின் என்பவர் கைது செய்யப்பட்டார். யொகோவாவின் சாட்சிகள் கிறிஸ்தவ சபையின் முன்னாள் ஊழியரான அவர், அந்த சபையின் நடவடிக்கைகள் பிடிக்காமல் குண்டு வெடிப்பை நிகழ்த்தியது விசாரணையில் தெரிய வந்தது.  குண்டு வெடிப்பில் படுகாயமடைந்த 10-க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பிரிவில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தனர். அடுத்ததடுத்தாக எண்ணிக்கை 7 ஆக அதிகரித்தது. இந்த நிலையில் களமச்சேரி குண்டு வெடிப்பில் காயமடைந்து தனியார் மருத்துவமனையில்  சிகிச்சை பெற்று வந்த லில்லி ஜான்  என்ற மூதாட்டி தற்போது உயிரிழந்த நிலையில், தற்போது வரையிலும் உயிரிழப்பு எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது.

Share this post with your friends