Mnadu News

கேரள மாநிலத்தில் ரயில் மோதி காட்டு யானை பலி..!

கேரள மாநிலம் பாலக்காடு அருகே கஞ்சிக்கோடு பகுதியில் ரயில் தண்டவாளத்தில் காட்டு யானை உயிரிழந்த நிலையில் காணப்பட்டது.. இது தொடர்பாக அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கும் ரயில்வே துறையினருக்கும் தகவல் அளித்ததன் பேரில் இருத்துறை அதிகாரிகளும் விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் கன்னியாகுமரியில் இருந்து அஸ்ஸாம் நோக்கிச் சென்ற விவேக் எக்ஸ்பிரஸ் ரயில் இன்று அதிகாலை பணப் பகுதிகளுக்கு நடுவே அமைந்துள்ள ரயில் தண்டவாளம் வழியாக சென்று கொண்டிருக்கும் போது வனப்பகுதியில் இருந்து இறங்கிய காட்டு யானை ரயில் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது தெரியவந்தது தொடர்ந்து யானையை உடற்கூறு ஆய்வு மேற்கொள்வதற்கான நடவடிக்கையில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

Share this post with your friends