திருவனந்தபுரத்தில் கேரளா வேட்பாளருக்கு வாக்குகள் சேகரிக்க தமிழிசை சௌந்தரராஜன் கேரளாவிற்கு விஜயம் செய்தார். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த தமிழிசை சௌந்தரராஜன்,
தமிழகத்தில் மட்டுமல்ல கேரளாவில் 20 தொகுதிகளிலும் பாஜக வெற்றி பெற்று கேரளாவிலும் தாமரையே மலரும் என்று கருத்து தெரிவித்தார்.
மேலும் பொன்பரப்பி மற்றும் பொன்னமராவதி நிகழ்வுகளுக்கு தனது வருத்தத்தை தெரிவித்தார்.இதுபோன்ற சாதிக் கலவரங்களை தூண்டுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்துள்ளார்.