Mnadu News

கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி 4 பேர் உயிரிழப்பு 2 பேர் மாயம்.

தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே பூண்டி மாதா பேராலயம் உள்ளது. மாதாவை தரிசிக்க வந்த சிலர் கொள்ளிடம் ஆற்றில், குளிப்பதற்காக இறங்கியுள்ளனர்.இதில், தூத்துக்குடி, சிலுவைபட்டி கோவில் தெருவை சேர்ந்த சார்லஸ், பிருத்திவிராஜ், தாவித்ராஜ், ஈசாக், பிரவின்ராஜ், கெர்மஸ் ஆகிய 6 பேரும் ஆற்றில் மூழ்கினர். அதையடுத்து ,திருக்காட்டுப்பள்ளி தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் 4 பேர் உடல்களை மீட்டனர் மேலும் 2 பேரின் உடலை தீயணைப்பு வீரர்கள் தேடுகின்றனர்.

Share this post with your friends