Mnadu News

தேயிலை தோட்டத்தில் நுழைந்த பாம்பு; பதற்றத்தில் பணியாளர்கள்

தேயிலை தோட்டத்தில் நுழைந்த பாம்பு; பதற்றத்தில் பணியாளர்கள்நீலகிரி மாவட்டம் கோத்தகிரியை அடுத்த நெடுகுலா கிராமப்பகுதியில் உள்ள தேயிலை தோட்ட தொழிலாளர்கள் தேயிலை பறிக்கும் பொழுது செடியின் மறைவில் வித்தியாசமாக ஏதோ இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அப்போது செடிகளின் நடுவில் பார்க்கும் போது அங்கு மலைப்பாம்பு ஒன்று படுத்து கிடப்பதை கண்டு உடனடியாக அங்கிருந்தவர்கள் வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். தகவலின் பேரில் அங்கு சென்ற வனத்துறையினர் மலைப்பாம்பை லாவகமாக பிடித்து எடுத்து சென்று அடர்ந்த வனப்பகுதிக்குள் பாதுகாப்பாக விட்டனர்.

Share this post with your friends