Mnadu News

கோலியை அசிங்கப்படுத்திய கவுதம் கம்பீர்

ஐபிஎல் ஃபீவர் கிரிக்கெட் ரசிகர்களிடம் பரவ ஆரம்பித்துவிட்டது. இந்நிலையில் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற கவுதம் கம்பீர் கோஹ்லியின் கேப்டன்சிப் குறித்து கூறிய பதில் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.

ஏறக்குறைய 8 ஆண்டுகளாக கேப்டன்ஷிப் பதவியை வைத்திருந்தும் ஒருமுறைக் கூட கோப்பையைக் கைப்பற்ற முடியாமல் இருக்கும் கோஹ்லியிடம் கேப்டன்ஷிப்பை 8 ஆண்டுகளாக பதவியை கொடுத்து வைத்திருக்கும் நிர்வாகத்துக்கு அவர் மிகுந்த நன்றி சொல்ல வேண்டும் என கவுதம் கம்பீர் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

நடந்து முடிந்த ஒரு நாள் போட்டியிலும் கோஹ்லி தலைமையிலான இந்திய அணி தொடரை இழந்தது குறிப்பிடத்தக்கது. தனிநபராக கோஹ்லி சாதனை அளப்பரியது. ஆனால் கேப்டன்ஷிப்பில் கவுதம் கம்பீர் சொல்லும் குற்றச்சாட்டைப் போல் நிறைய இருப்பதாக கிரிக்கெட் ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

Share this post with your friends