Mnadu News

கோவையில் போலி 2,000 ரூபாய் நோட்டுகள் கட்டுக்கட்டாக பறிமுதல்.

கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் அருகே பிரஸ் காலனியில் உள்ள குடியிருப்பு ஒன்றில் சந்தேகத்திற்கு இடமான நபர்கள் தங்கி இருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அந்த வீட்டை சோதனையிட்டபோது அங்கு கட்டு கட்டாக 2 ஆயிரம் ரூபாய் போலி நோட்டுகள் அட்டை பெட்டியில் அடுக்கி வைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது.
இது தொடர்பாக அந்த வீட்டில் இருந்த விருதுநகரைச் சேர்ந்த காளிமுத்து, நாமக்கல்லைச் சேர்ந்த விஜயகுமார், மோகன்ராஜ் ஆகிய மூன்று பேரை கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து 9 பெட்டிகளில் இருந்த போலி 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் மற்றும் இரண்டு கோவில் கலசம், லேப்டாப், 4 மொபைல் போன்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இது தொடர்பாக ஜடகோபால் என்ற நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
முதல் கட்ட விசாரணையில் அவர்கள் இரிடியம் இருப்பதாக சொல்லி மோசடி செய்யும் கும்பலைச் சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்துள்ளது.

Share this post with your friends