Mnadu News

கோவை கார் வெடிப்பு: 6-வது நபர் கைது.

கோவை மாவட்டம், டவுன்ஹால் பகுதி கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அதி காலை காரில் இருந்த சிலிண்டர் வெடித்ததில் கார் முழுவதும் சேதமடைந்ததோடு காரில் இருந்த உக்கடம் பகுதியைச் சேர்ந்த ஜமேஷா முபீன் என்ற இளைஞர் உடல் கருகி உயிரிழந்தார்.இதையடுத்து, தடய அறிவியல் துறையினர்; தடயங்களை சேகரித்து விசாரணை மேற்கொண்டதில், ஆணிகள், கோலி குண்டுகள் கைப்பற்றப்பட்டது.இதைத் தொடர்ந்து ஜமேஷா முபீன் உடன் தொடர்பில் இருந்த உக்கடம் பகுதியைச் சேர்ந்த முகமது 25 வயதான தல்கா , 29 வயதான முகமது அசாருதீன் , ஜி.எம். நகர் பகுதியைச் சேர்ந்த 27 வயதான முகமது ரியாஸ் , 27 வயதான ஃபிரோஸ் இஸ்மாயில், 26 வயதான முகமது நவாஸ் இஸ்மாயில் ஆகியோரை யுஏபிஏ அதாவது சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் போலீஸார் கைது செய்துள்ளனர்.,இந்நிலையில், கார் வெடிப்பில் உயிரிழந்த முபீனின் உறவினரான அஃப்சர் கான் என்பரை நேற்று நள்ளிரவில் கைது செய்த காவல்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையே, தேசிய புலனாய்வு முகமையின் விசாரணைக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பரிந்துரைத்த நிலையில், கோவைக்கு விரைந்துள்ள என்ஐஏ அதிகாரிகள் வழக்கின் தகவல்களை சேகரித்து வருகின்றனர்.

Share this post with your friends