தமிழகத்தில் மொத்தம் 22 சட்டமன்றத் தொகுதிகள் காலியாக உள்ளன. அதில் 18 தொகுதிகளுக்கு ஏப்ரல் 18ம் தேதி நடைபெற்ற மக்களவைத் தேர்தலுடன் சேர்த்து நடைபெற்றது.
மீதமுள்ள 4 தொகுதிகளில் மூன்று தொகுதிகளுக்கு நீதிமன்ற வழக்குகள் நிலுவையைக் காரணம் காட்டி தேர்தலை தள்ளி வைத்தது. இந்நிலையில் அந்த 4 தொகுதிகளுக்கான தேர்தலை மே 19ம் தேதி நடத்துவதாக தேர்தல் ஆணையம் தெரிவித்தது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு வேட்பாளர்களை திமுக தலைவர் அறிவித்தார். மேலும் தேர்தல் பொறுப்பாளர்களை நேற்று அறிவித்தார். அடுத்தக் கட்ட நடவடிக்கையாக மே 1ம் தேதி ஒட்டப்பிடாரத்தில் இருந்து தேர்தல் பரப்புரையை ஆரம்பிக்க உள்ளதாக திமுக தலைவர் முக. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.