Mnadu News

சண்டிகருக்குள் தனியார் பேருந்துகள் நுழையத் தடை.

சண்டிகருக்குள், தனியார் பேருந்துகளுக்கு அனுமதி கிடையாது என்று, முதல் அமைச்சர் பகவந்த் மான் தலைமையிலான அரசு அறிவித்துள்ளது. இது குறித்து, பஞ்சாப் மாநில அமைச்சர் லால்ஜித் சிங் தெரிவிக்கையில், பஞ்சாப் போக்குவரத்துத் திட்டம் – 2018 என்பது, முந்தைய காங்கிரஸ் அரசால் உருவாக்கப்பட்டது, பாதல் குடும்பம் மற்றும் ஒரு ரௌடி கும்பலின் பேருந்து நிறுவனங்கள் பயன்பெறும் வகையிலேயே உருவாக்கப்பட்டுள்ளது என்றும் குற்றம்சாட்டியுள்ளார். தனியார் வால்வோ பேருந்துகள் சண்டிகருக்குள் நுழைய அனுமதிக்கப்பட்டதால், அரசுப் பணம் அதிகளவில் நஷ்டமடைந்துள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

Share this post with your friends