Mnadu News

சர்வதேச அளவில் இறால் ஏற்றுமதியில் இந்தியா முதலிடம்: எல்.முருகன் தகவல்.

நாமக்கல் மாவட்ட பாஜக அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில் மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு, பால்வளம், தகவல் ஒலிபரப்பு துறை இணை அமைச்சர் எல்.முருகன் கலந்து கொண்டு 46 அடி உயரக் கொடிக் கம்பத்தை திறந்து வைத்தார். இதனைத் தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில் பேசியுள்ள அவர், இந்திய மீன்வளத் துறை, சர்வதேச அளவில் முதலிடம் வகிக்கிறது.குறிப்பாக, ஆந்திர மாநிலம் தமிழகம் உள்ளிட்டவற்றிலிருந்து அதிக அளவில் இறால் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த இறால்கள் அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டுத் தொடர்ந்து சர்வதே சந்தையில் இந்திய முதலிடம் வகிக்கிறது.

Share this post with your friends