Mnadu News

சிகிச்சை முடிந்து அமைச்சர் மெய்யநாதன் சென்னை திரும்பினார்.

ராமேஸ்வரத்தில் இருந்து சென்னை செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலில் அமைச்சர் மெய்யநாதன் நேற்று சென்னைக்கு பயணம் செய்தார். புதுக்கோட்டை ரயில் பயணத்தின் போது ரத்த அழுத்தம் காரணமாக அமைச்சர் மெய்யநாதனுக்கு திடீர் உடல் நல பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து, நள்ளிரவு 2 மணியளவில் சிதம்பரம் ரயில் நிலையத்தில் இறங்கிய அமைச்சர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்ட பிறகு தற்போது அமைச்சர் நலமுடன் இருப்பதால் அவர் சென்னை திரும்பி உள்ளார்.

Share this post with your friends