ராமேஸ்வரத்தில் இருந்து சென்னை செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலில் அமைச்சர் மெய்யநாதன் நேற்று சென்னைக்கு பயணம் செய்தார். புதுக்கோட்டை ரயில் பயணத்தின் போது ரத்த அழுத்தம் காரணமாக அமைச்சர் மெய்யநாதனுக்கு திடீர் உடல் நல பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து, நள்ளிரவு 2 மணியளவில் சிதம்பரம் ரயில் நிலையத்தில் இறங்கிய அமைச்சர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்ட பிறகு தற்போது அமைச்சர் நலமுடன் இருப்பதால் அவர் சென்னை திரும்பி உள்ளார்.
நீட் மறுதேர்வு நடத்த உத்தரவிட முடியாது – உச்சநீதிமன்றம் திட்டவட்டம்
நீட் மறுதேர்வு நடத்த முடியாது என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு திட்டவட்டமாக...
Read More