Mnadu News

சிதம்பரத்தில் பானை சின்னத்தில் போட்டியிடும் திருமாவளவன்

மக்களவைத் தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சிதம்பரம், விழுப்புரம் ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிடுகிறது. விழுப்புரத்தில் போட்டியிடும் ரவிக்குமார் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறார்.

ஆனால் சிதம்பரம் தொகுதியில் போட்டியிடும் விசிக கட்சித் தலைவர் தனிச் சின்னத்தில் போட்டியிடுவார் என அறிவித்தார். அதன்படி மோதிரம் சின்னத்தை ஒதுக்கும்படி தேர்தல் ஆணையத்தை அணுகினார். ஆனால் மோதிரம் சின்னத்தை ஒதுக்க தேர்தல் ஆணையம் மறுத்து விட்டது. இந்நிலையில் மண்பானை சின்னத்தை  திருமாவளவனுக்கு தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது.

நீண்ட போராட்டங்களுக்குப் பின்னர் திருமாவளவனுக்கு சின்னம் ஒதுக்கப்பட்டதால் தொண்டர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

Share this post with your friends