Mnadu News

சித்ரா பவுர்ணமி: சதுரகிரி செல்ல வரும் 6 ஆம் தேதி வரை பக்தர்களுக்கு அனுமதி.

விருதுநகர் மாவட்டம்- மதுரை மாவட்டம் எல்லைப் பகுதியில் வத்திராயிருப்பு அருகே மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது சதுரகிரி மலை. இங்கு பிரசித்தி பெற்ற சுந்தர மகாலிங்கம் மற்றும் சந்தன மகாலிங்கம் கோயில்கள் உள்ளன. பிரதோஷம் மற்றும் சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு வரும் 6-ஆம் தேதி வரை சதுரகிரி மலைக்குச் செல்ல பக்தர்களுக்கு வனத்துறையும் கோயில் நிர்வாகமும் அனுமதியளித்துள்ளன.அதே நேரம், பக்தர்கள் இரவில் மலைப் பகுதியில் தங்குவதர்கு அனுமதி இல்லை என வனத் துறையினர் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

Share this post with your friends