நிறைய படங்கள் நடித்தும் இன்னும் பெரிய அளவில் பிரபலமாகாமல் இருக்கும் சிலருக்கு மத்தியில் குறைந்த படங்களின் மூலம் அவரின் கடின உழைப்பால் அவருக்கென்ற ஒரு தனி உச்சத்தையும் குழந்தை முதல் பெரியவர்கள் வரை ஒரு குடும்ப ரசிகர் பட்டாளத்தையே வைத்திருக்கிறார் நடிகர் சிவகார்த்திகேயன். ஆரம்ப காலத்தில் இவர் பார்க்காத வேலையே இல்லை மேடை பங்கேற்பாளரிலிருந்து ஒரு தொலைக்காட்சியில் தொகுப்பாளராக மாறி கலக்கி வந்த சிவகார்த்திகேயன் தமிழ் திரைப்படங்களில் காமெடியனாக வேண்டும் என்ற ஆசையும் வைத்திருந்தார்.
ஆனால் மக்கள் அவரை காமெடியனாக பார்க்காமல் ஒரு ஹீரோவாக பார்த்தார்கள். மெரினா முதல் சீமராஜா வரை இவர் நடித்த அனைத்து படங்களும் வெற்றி பெற்றது மட்டும் இல்லாமல் குடும்பத்துடன் பார்ப்பதற்கு ஏற்ற ஒரு நல்ல குடும்ப படநடிகராகவும் இருந்தார். அதற்கு பின் தயாரிப்பாளராகவும் பாடகராகவும் பாடலாசிரியராகவும் அவரது பயணத்தை சிறப்பாக இன்று வரை செய்து வருகிறார் சிவகார்த்திகேயன்.
சமீபத்தில் விருது வழங்கும் விழாவில் பங்கேற்ற சிவகார்த்திகேயன் கோலா மாவு கோகிலா படித்திற்காக சிறந்த கமர்சியல் இயக்குனருக்கான விருதை சிவகார்த்திகேயன் கையால் அப்பட இயக்குனரான நெல்சன் வாங்கினார். அப்போது நெல்சன் அவர்களுக்கு வாழ்த்துக்களை சொல்லி நான் நெல்சனிடம் உதவி இயக்குனராக சிம்பு நடித்துவந்த படத்தில் பணியாற்றினேன். ஆனால் அந்த படம் வெளிவரவில்லை என்று அவரது கடந்த கால நினைவுகளை மேடையில் அனைவர் முன் பகிர்ந்து கொண்டார் சிவகார்த்திகேயன் .