Mnadu News

சிரியாவில் பயங்கரவாதிகளின் அட்டூழியம்! ராணுவத்தினர் அதிரடி நடவடிக்கை!

சிரியா நாட்டின் வடமேற்கு மாகாணங்களில் கிளர்ச்சியாளர்கள் அந்நாட்டினை எதிர்த்து போராடி வருகிறார்கள். இந்த பயங்கரவாதிகள் தொடர் அச்சுறுத்தும் செயல்களில் ஈடுபடுகிறார்கள். ஆம், நவீன ஆயுதங்கள் கடத்தி பறிமுதல் செய்தல், கொடூர கொலைகளை புரிதல், அரசுக்கு எதிராக சதி தீட்டுதல் உள்ளிட்ட பயங்கரவாத செயல்களில்.

அவர்களின் நடவடிக்கைகளை எதிர்க்கும் வகையில் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் அமைதி படையை உருவாக்கி களம் அங்கே இறக்கி உள்ளனர். இந்தநிலையில் துருக்கியை சேர்ந்த ராணுவத்தினர் அங்கு வழக்கமான ரோந்து பணி மேற்கொண்டனர்.

அப்போது பயங்கரவாதிகள் சிலர் அவர்களின் மீது திடீர் தாக்குதலில் ஈடுபட்டனர். சுதாரித்துக் கொண்ட ராணுவத்தினர் பதில் தாக்குதலில் ஈடுபட்டனர். சரமாரி குண்டுமழை பொழிவினால் அப்பகுதி போர்க்களமானது. இந்த தாக்குதலில் பயங்கரவாதிகள் 4 பேர் உடல் சிதறி ரத்தவெள்ளத்தில் பலியாகினர்.

Share this post with your friends