சிரியாவில் உள்நாட்டு போர் பல ஆண்டுகளாக நீடித்து வருகிறது. இந்த போரில் சிரிய அதிபர் பஷில் அல் அசாத்திற்கு ரஷியா ஆதரவு அளித்து வருகிறது. அதேவேளை, சிரியாவில் தொடக்கத்தில் குர்திஷ் கிளர்ச்சியாளர்களுக்கு அமெரிக்கா ஆதரவு அளித்தது.
![](https://mnadu.com/wp-content/uploads/2023/07/syria.jpg)
தற்போது சிரியாவில் பதுங்கியுள்ள ஐ.எஸ். பயங்கரவாதிகளை குறிவைத்து அமெரிக்கா வான்வெளி தாக்குதல் மட்டும் நடத்தி வருகிறது. ஆனாலும், அந்நாட்டில் தொடர்ந்து பயங்கரவாத தாக்குதல் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.
![](https://mnadu.com/wp-content/uploads/2023/07/syria-1.jpg)
இந்நிலையில், அந்நாட்டின் தலைநகரில் இஸ்லாமிய மத வழிபாட்டுத்தலம் உள்ளது. ஷியா பிரிவினருக்கான இந்த வழிபாட்டு தலத்திற்கு தினமும் நூற்றுக்கணக்கானோர் வழிபாடு நடத்த வருகை தருகின்றனர்.
![](https://mnadu.com/wp-content/uploads/2023/07/syria-3.jpg)
இந்த வழிபாட்டுத்தலம் அருகே நேற்று குண்டு வெடிப்பு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த குண்டு வெடிப்பில் 6 பேர் உயிரிழந்தனர். மேலும், 20 பேர் படுகாயமடைந்தனர். காரில் நிரப்பப்பட்ட குண்டுகள் வெடித்துள்ளது. இந்த குண்டு வெடிப்பு பயங்கரவாத தாக்குதல் என்று சிரியா உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
![](https://mnadu.com/wp-content/uploads/2023/07/syria-4.jpg)